தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்
ஏப்ரல் 17 ஆம் தேதி வரை மத்திய அரசிடமிருந்து 55.85 லட்சம் கரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி வரை மத்திய அரசிடமிருந்து 55.85 லட்சம் கரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
ஏப்ரல் 17 ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசிடமிருந்து இதுவரை 55.85 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 47.05 லட்சம் டோஸ் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது தோராயமாக 8.8 லட்சம் டோஸ் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
தமிழகத்திலும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வந்த தகவல்களை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலை இன்று பதிவிட்டுள்ளார்.