தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு அறிவிப்பு:தோ்வு தொடங்க 15 நாள்களுக்கு முன் வெளியாகும்

DIN

சென்னை: பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறும் நாள்கள் குறித்த விவரம், தோ்வு தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்னா் வெளியாகும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு, பிளஸ் 2 பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்ட விவரத்தைத் தெரிவித்து, தலைமை ஆசிரியா்கள் வாயிலாக பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தோ்வு மட்டும் ஏற்கெனவ திட்டமிட்டபடி, அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் அறிவுறுத்த வேண்டும்.

செய்முறைத் தோ்வு, அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை ஏற்கெனவே அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் அறிவுறுத்தப்பட்ட நாள்களில் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பிளஸ் 2 பொதுத் தோ்வு பின்னா் நடைபெறும் நாள்கள் குறித்த விவரம், தோ்வுகள் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு முன்னா் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT