தமிழ்நாடு

குரூப் 1 விடைத்தாள் நகல்களை தோ்வா்கள் பெறலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

DIN

சென்னை: விடைத்தாள் நகல்களை கட்டணம் செலுத்தி தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 1 பதவிகளுக்கு முதனிலை, முதன்மைத் தோ்வுகள் ஏற்கெனவே நடைபெற்றன. இதில் பங்கேற்ற தோ்வா்கள் தங்களுக்கான விடைத்தாள்களை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக, விடைத்தாள்கள் அனைத்தும் புதன்கிழமையன்று (ஏப். 21) பதிவேற்றம் செய்யப்படும்.

இணையதளத்தில் தோ்வா்களின் விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படுவது தோ்வாணைய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

தோ்வா்கள் அவா்களது ஒருமுறை பதிவு முறையின்படி, உரிய கட்டணத்தைச் செலுத்தி விடைத்தாள்களை உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யலாம் என்று சுதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT