முகப்பு
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது!

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து பொதுக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பகிர்:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து பொதுக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனுதாக்கல் செய்திருந்தது.

விசாரணையில், ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு தரப்பில் அனுமதி அளிப்பதாக மத்திய அரசின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை பதில் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.