முகப்பு
தமிழ்நாடு

தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மே மாதம் மற்றும் ஜீன் மாதங்களில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவிவரும் நிலையில், மக்களைக் காக்கும் விதமாக, நாள்தோறும் இரண்டு லட்சம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 நாள்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை முன்னரே அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமிகடிதம் எழுதி

இருக்கிறாா். அவற்றை உடனடியாக தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →