ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடக்கம் 
தமிழ்நாடு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடக்கம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடங்கப்படுகிறது.

DIN


சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடங்கப்படுகிறது.

இது குறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான புறநோயாளிகள் மருத்துவப் பிரிவு வரும் வெள்ளிக்கிழமை ஆக.6ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை செயல்பட உள்ளது.

மனநல மருத்துவர், பால்வினை நோய் மருத்துவர், நாளமில்லா சுரப்பிகள் துறை மருத்துவர், ஒட்டுறுப்பு அறுவையியல் துறை மருத்துவர் என நான்கு சிறப்பு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்களைக் கொண்டு இந்த புறநோயாளிகள் மருத்துவப் பிரிவு செயல்படும்.

இப்பிரிவில் திருநங்கைகள் தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்று பலனடையுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT