ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தஹியாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மற்போரில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள ரவி குமார் தஹியாவுக்கு வாழ்த்துகள்.
ஒலிம்பிக் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற இரண்டாவது இந்திய மற்போர் வீரர் இவர் என்பதே இவரது அரிய சாதனையின் பெருமையைப் பறைசாற்றும். அவரது எதிர்கால வெற்றிகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே| ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளி