தமிழ்நாடு

சென்னை உள்பட 5 மாவட்டங்களில்  நடமாடும் காய்கனி அங்காடிகள்

DIN

சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் அறிவித்ததாவது, 
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.

காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம்
விளைபொருள்களுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களுக்காகவும் சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைக்கப்படும்.

முருங்கைக்காய் சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்

முருங்கைக்காய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அதிகரிக்க முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் ஏற்படுத்தப்படும்.

7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT