FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 5 மாவட்டங்களில்  நடமாடும் காய்கனி அங்காடிகள்

சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.

Updated On : 14 ஆகஸ்ட் 2021, 5:03 pm IST
சென்னை உள்பட 5 மாவட்டங்களில்  நடமாடும் காய்கனி அங்காடிகள்
பகிர்:

சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் அறிவித்ததாவது, 
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.

Advertisement

Advertisement

காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம்
விளைபொருள்களுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களுக்காகவும் சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைக்கப்படும்.

முருங்கைக்காய் சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்

முருங்கைக்காய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அதிகரிக்க முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் ஏற்படுத்தப்படும்.

7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments