உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேனர் கலாசாரத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இது போன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கல் தொடர்வது என்னை வருத்தமடையச் செய்கிறது.
என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செயல்பட வேண்டும் எனக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பேனர் விபத்தால் 13 வயதே ஆன தினேஷை இழந்துவாடும் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. இனி இதுபோன்று நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.