தமிழ்நாடு

செப். 1-இல் கல்லூரிகள் திறப்பு: சுழற்சி முறையில் வகுப்புகள்

DIN

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்ததையடுத்து, வருகின்ற செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

இதையடுத்து உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிகள் திறப்பதற்கான வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில்,

இளநிலை இரண்டாம் ஆண்டு, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும்.

மேலும், பொறியியல் படிப்புகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் நேரடி வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நட்சத்திர விடுதியில் நபா நடேஷ்..!

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

SCROLL FOR NEXT