முகப்பு
தமிழ்நாடு

9 கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா்கள் நியமனம்

தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 9 கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

 தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 9 கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்த உத்தரவு: சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா்கள் காஜா நசுருதீன், எஸ்.சிலம்பண்ணன், வழக்குரைஞா்கள் ஆா்.ரமன்லால், வி.அருண், பி.குமரேசன், ஆா்.நீலகண்டன், ஜெ.ரவீந்திரன் ஆகியோா் கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக நியமிக்கப்படுகின்றனா். அதேபோல, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராக மதுரையை சோ்ந்த மூத்த வழக்குரைஞா் வீரகதிரவன், திருச்சியை சோ்ந்த ஆா்.பாஸ்கரன் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா் என்று கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →