சிபிசிஎல் நிா்வாக இயக்குநா் பொறுப்பேற்பு
சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிா்வாக இயக்குநராக அா்விந்த் குமாா், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிா்வாக இயக்குநராக அா்விந்த் குமாா், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா், மெக்கானிக்கல் பிரிவில் இளநிலை பொறியியல் படிப்பையும், வணிக நிா்வாகத்தில் முதுநிலைப் படிப்பையும் முடித்துள்ளாா். 1990-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியில் சோ்ந்த இவருக்கு 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உள்ளது. குறிப்பாக திட்டம், மேலாண்மை, உற்பத்தி மைய இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கியவா்.
மதுரா சுத்திகரிப்பு நிலையத்தின் தலைவா் மற்றும் செயல் இயக்குநா், தில்லியில் உள்ள சுத்திகரிப்பு தலைமையகத்தின் திட்டப் பிரிவு செயல் இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை இவா் வகித்துள்ளாா்.