முகப்பு
தமிழ்நாடு

பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை: அமைச்சர் பொன்முடி விளக்கம்

ஜெயலலிதா பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
அமைச்சர் பொன்முடி(கோப்புப்படம்)
பகிர்:

ஜெயலலிதா பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதா அதிமுக உறுப்பினர்களுக்கு மத்தியில் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

அப்போது அமைச்சர் பொன்முடி பேசியது:

“பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை. இசை மற்றும் மீன்வளப் பல்கலைகழகத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை. உயிருடன் இருக்கும்போது பெயர் வைக்கக்கூடாது என விதி இருக்கும்போது அம்மா உணவகம் என பெயர் வைத்தது யார்?

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலைஞரின் பெயரை மாற்றியது அதிமுகதான்.”

முழு கட்டுரையைப் படிக்க →