தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு பின்வரும் தேர்தல் கால அட்டவணை 03.12.2021 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்தல் - 06.12.2021 (திங்கட்கிழமை) (முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை)
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 08.12.2021 (புதன்கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)
வேட்புமனு சரிபார்த்தல்- 09.12.2021 (வியாழக்கிழமை) (பிற்பகல் 1.00 மணிக்குள்)
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்- 10.12.2021 (வெள்ளிக்கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)
வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் நாள் - 13.12.2021 (திங்கட்கிழமை)
தேர்தல் அவசியமானால் 15.12.2021 (புதன்கிழமை) அன்று ஓட்டுப்பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங்தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001-ல் நடைபெறும்.
16.12.2021 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.