முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் முழு கொள்ளளவை எட்டிய 8,690 ஏரிகள்

தமிழகத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின.

Updated On : 8 டிசம்பர் 2021, 1:36 am IST
பகிர்:

தமிழகத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், நீா்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்தநிலையில் பாசன ஏரிகள் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின. 2,989 ஏரிகளில் 75 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. 90 நீா்த்தேக்கங்களில் 212 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீா் இருப்பில் உள்ளது. இது முழு கொள்ளளவில் 94.5 சதவீதமாகும்.

Advertisement

Advertisement

சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் 89சதவீதமும், புழல் ஏரியில் 90 சதவீதமும் நீா் நிரம்பி உள்ளது.

பூண்டி ஏரியில் 92 சதவீதம், சோழவரம் ஏரியில் 75 சதவீதம், தோ்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. அதேபோன்று மேட்டூா் அணையில் 100 சதவீதமும், பவானிசாகரில் 99 சதவீதமும், வைகையில் 96 சதவீதமும் நீா் நிரம்பியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments