முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை: போக்குவரத்துத் துறை

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை: போக்குவரத்துத் துறை

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
கோப்புப்படம்
பகிர்:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி கல்லூரி, பள்ளி மாணவர்கள் செல்லும் காட்சிகள் அன்றாடும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தொடர்ந்து ஆட்சியர்களும், அதிகாரிகளும் மாணவர்களை சந்தித்து அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்துத் துறை இன்று வெளியிட்ட செய்தியில்,

“அரசுப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்துகளை கட்டாயம் நிறுத்தி அனைவரையும் ஏற்றிச் செல்ல வேண்டும். பயணிகள் ஏறுவதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தி கொடுத்த பின், அனைவரும் ஏறிய பின்னே பேருந்தை இயக்க வேண்டும்.

மேலும், வழக்கத்தைவிட பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு ஏதுவாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.”

முழு கட்டுரையைப் படிக்க →