மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் ஜெய பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.  
தமிழ்நாடு

மானாமதுரை அருகே ஜெய பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்களை வைத்து கடந்த புதன்கிழமை யாக வேள்வி தொடங்கியது. இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்று பூர்ணாகஹூதி நிறைவடைந்து மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. 

குலால சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். அதன்பின்னர் வானத்தில் கருடன் வட்டமிட மூலவர் ஜெயா பெருமாள் விமான கலசத்திற்கும் பெருமாளின் 10  அவதாரங்களுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. 

மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் நடைபெற்ற ஜெய பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா,  திமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உள்ளிட்டோர்.

கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமானோர் குடமுழுக்கு விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.  பாஜக முன்னாள் தேசிய செயலர் எச். ராஜா, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், தமிழரசி உள்ளிட்ட முக்கிய அரசியல்  பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். கோயில் நிர்வாகியான சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT