கோப்புப்படம் 
தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

DIN

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்த தடையானது டிசம்பர் 15ஆம் தேதி முடிவடையவுள்ளது.

இதற்கிடையே அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா வகையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிய வகை கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலர், மருத்துவத்துறை செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT