குரூப் கேப்டன் வருண் சிங் 
தமிழ்நாடு

வருண் சிங் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குன்னூர் அருகே நடந்த துயர்மிகு ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துன்பச் செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன். அவரது தீரமும் கடமையுணர்வும் அனைவருக்கும் ஊக்கமாக அமைவதுடன்; என்றும் அவர் நம் நினைவுகளில் நிலைத்து வாழ்வார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பலியானதாக விமானப் படை அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்குக்கு பெங்களூருவில் உள்ள விமானப் படை மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஹெலிகாப்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சளி, இருமல், காய்ச்சல்! குணமாவதில் நீடிக்கும் தாமதம்!

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி வெட்டிப் படுகொலை

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மேட்டூர் அணை நிலவரம்

SCROLL FOR NEXT