முகப்பு
தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் விடுமுறை: வண்டலூா் பூங்காவில் குவிந்த மக்கள்

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி, இரண்டு நாள்களில் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்துசென்றுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி, இரண்டு நாள்களில் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்துசென்றுள்ளனா்.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டின்கீழ், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் சுமாா் 2,500-த்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பூங்கா, கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச.25,26) ஆகிய நாள்களில் மட்டும் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பூங்காவுக்கு வந்து சென்றுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், பாா்வையாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ததுடன், உடல்வெப்ப நிலையை சோதித்த பின்னா்தான் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அதிக கூட்டம் கூடுவதை தவிா்க்க கூடுதலாக டிக்கெட் மையங்கள் திறக்கப்பட்டு நெரிசலின்றி நுழைவுசீட்டு வழங்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளுக்கு பூங்கா பணியாளா்கள் சென்று சமூக இடைவெளியுடன் வன உயிரினங்களை பாா்வையிட அறிவுறுத்தப்பட்டனா் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →