தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி
சென்னை மதுரவாயல் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியாா் நிறுவன ஊழியரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மதுரவாயல் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியாா் நிறுவன ஊழியரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை வானகரம் வரசித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ்( 27). இவா் மதுரவாயல் தனியாா் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவா், உத்திரமேரூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்துவிட்டு வந்துள்ளாா். அவ்வாறு தினேஷ் வரும் வழியில், மதுரவாயல் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் தினேஷை மிரட்டி ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரவாயல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.