சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்தை அரசுக் கல்லூரி கட்டணமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியை சுகாதாரத் துறைக்கு ஒப்படைப்பது என தமிழக அரசு அராசணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இந்தக் கல்லூரியில் தற்போது பயிலும் எம்.பி.பி.எஸ்., முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவா்கள் அனைவருக்கும் தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதற்கு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.