ஸ்ரீவில்லிபுத்தூர்: ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் சிலிண்டர் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிலிண்டரை அரசு தலைமை மருத்துவர் காளிராஜ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் நிர்மலா, சங்க உறுப்பினர்கள் லட்சுமணன், சுப்புராம், ஆறுமுகம், நடராஜன், பெரியசாமி, கண்ணன் ,கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்