முகப்பு
தமிழ்நாடு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்: விவசாயிகள் மரியாதை

ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்திற்கு விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா..விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை
பகிர்:

ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்திற்கு விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.

ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகே உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் மாநில தலைவர் கொளத்தூர் வெங்கடேசன் தலைமையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் சேகர், மாவட்ட துணைத்தலைவர் வானாபாடி பெரியசாமி, முருகேசன் நகர தலைவர் சுந்தரமூர்த்தி, எஸ் எம் சிவக்குமார், புருஷோத்தமன், தனபால், பொன்னுரங்கம், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.