தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலி

DIN


சமயபுரம் கோவிலுக்குச் சென்று திரும்பும் பொழுது கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலியாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  அத்திமானம் என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

பூந்தமல்லி பகுதியில் வசித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் கோவிலுக்குச் சென்று காரில் திரும்பும் வழியில் அத்திமானம் என்ற இடத்தில் சாலையில் லாரி மீது வேகமாக மோதியதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள், இரண்டு ஆண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

விபத்து குறித்து படாளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். 

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, அவருடைய மனைவி இந்திராணி, மகள்  மகாலட்சுமி மற்றும் சாந்தி, கார் ஓட்டுநர் ஆகியோர் விபத்தில் பலியாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT