தஞ்சாவூரில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல்
தஞ்சாவூரில் சசிகலா உறவினர்கள், இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான மேலும் சில சொத்துகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.
தஞ்சாவூரில் சசிகலா உறவினர்கள், இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான மேலும் சில சொத்துகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை 2017-ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதியானது.
இந்தச் சிறைத் தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி விடுதலையாகினர். சுதாகரன் இன்னமும் அபராத தொகையைச் செலுத்தாததால் விடுதலையாகவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசுக் கையகப்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவருக்கும் சொந்தமான சொத்துகள் திங்கள்கிழமை கையகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் உள்ள 26,540 சதுர அடி காலி மனையை அரசு செவ்வாய்க்கிழமை காலை கையகப்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.