வேலூர்: கிருபானந்த வாரியார் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாரியார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
காட்பாடி, காங்கேயநல்லூரில் பிறந்து சைவ சமய சொற்பொழிவாற்றி அதன் மூலம் கிடைத்த வருவாயில் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட சமூக சேவைகள் புரிந்தவா் திருமுருக கிருபானந்தவாரியாா். அவா் நினைவாக கிருபானந்த வாரியாா் பிறந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று வேலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
இந்த அறிவிப்புக்கு வாரியார் குடும்பத்தினர் முதல்வரை புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.