முதுமலை புலிகள் காப்பகத்தில் காலியான பெரிய தண்ணீர் இல்லாத நீர் தொட்டிக்குள் சிக்கிக்கொண்ட ஆண் கரடி.  
தமிழ்நாடு

முதுமலை புலிகள் காப்பகத்தில் நீர் தொட்டிக்குள் சிக்கிக்கொண்ட கரடி மீட்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் நீர் தொட்டிக்குள் சிக்கிக்கொண்ட கரடி மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

DIN


முதுமலை புலிகள் காப்பகத்தில் நீர் தொட்டிக்குள் சிக்கிக்கொண்ட கரடி மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனச்சரகத்தில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் உள்ள காலியான பெரிய தண்ணீர் இல்லாத நீர் தொட்டிக்குள் புதன்கிழமை ஒரு ஆண் கரடி சிக்கிக்கொண்டது. 

இது குறித்த தகவலறிந்த அப்பகுதி வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்து அந்த கரடிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர். பின்னர் மரக்கிளைகளைக் கொண்டு ஏணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அந்த கரடி வெளியேற வாய்ப்பு ஏற்படுத்தி தந்தனர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த கரடி வனப்பகுதிக்குள் திரும்பி சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவ்!

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் டிச.4 விசாரணை!

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு: ராஃப்ரி தேவி மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ருதுராஜ் ஜெய்க்வாட்!

SCROLL FOR NEXT