முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள  தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், புதன்கிழமை நடைபெற்ற  தவக்காலத்திற்கான சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Updated On : 17 பிப்ரவரி, 2021 at 9:23 AM
சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:03 AM



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள  தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், புதன்கிழமை நடைபெற்ற  தவக்காலத்திற்கான சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகின்ற  தவக்காலத்தின் தொடக்க நாள் நிகழ்வாக சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருபலி பூஜையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக்கொண்டு தவநாள்களை அனுஷ்டிக்க தொடங்குவார்கள்.

அதேபோன்று, கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடைபெற்றது.

Advertisement

இந்த சிறப்பு திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருட்திரு. இசையாஸ் முன்னின்று நடத்தினார். இதில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டு தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு, தங்களுடைய தவமுயற்சிகளை தொடங்கினர்.

தவக்காலத்தை அனுஷ்டிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருள்களை தவிர்த்து சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவநாள்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.