கோப்புப்படம் 
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி:  தமிழக அரசு அரசாணை வெளியீடு

தருமபுரி மாவட்டத்தில் புதியதாக வேளாண் கல்லூரி தொடங்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN


சென்னை: தருமபுரி மாவட்டத்தில் புதியதாக வேளாண் கல்லூரி தொடங்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தருமபுரி மாவட்டம் கும்முனூர் கிராமத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் புதியதாக வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான புதிய வேளாண் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.  இதற்காக ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரி நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருவதாகவும், கல்லூரி தற்காலிகமாக, மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் சேர்க்கை, உதவி பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட பணிகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT