தமிழ்நாடு

விருகம்பாக்கத்தில் போட்டியிட விஜயகாந்த் விருப்ப மனு

DIN

சட்டப் பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவரது மனைவி பிரேமலதா, விருதாச்சலத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

திமுக, அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (பிப்.25) முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை முதல் தேமுதிகவில் போட்டியிட விரும்புபவகளுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அவரது மனைவியும் பொருளாளருமான பிரேமலதா விருதாச்சலத்தில் போட்டிவும், அவரது மகன் விஜய பிரபாகரன் அம்பத்தூரில் போட்டியிடவும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT