முதல்வருடன் அன்புமணி. 
தமிழ்நாடு

10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா: முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியமைக்காக முதல்வரை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.

DIN

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியமைக்காக முதல்வரை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.
அரசு கல்வி மற்றும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார். 
மேலும், சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 
இதன் மூலம் எம்பிசி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் எம்பிசி-வி என்ற உள்பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. 
இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியமைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT