உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் இரண்டாவது நாள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து துறை பணிமனை முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழகத்தினர் 14 அம்சக்கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் அனைத்து தொழிற்சங்கத்தினர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பஸ்களை இயக்கப்படவில்லை. உசிலம்பட்டியில் இருந்து 102 பேருந்துகள் இயக்கப்பட வேண்டியதில் 14 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது.
14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த கோரி உசிலம்பட்டி கிளை அரசு போக்குவரத்துக்கழக முன்பாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் செயலாளர் எம்.சி பாண்டி, சிஐடியு செயலாளர் ஆசைத்தம்பி, டியூசிசி தலைவர் குணசேகரன், ஏஐடியூசி தலைவர் ராஜா, மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்ற கோரி போராட்டக்குழு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.