முகப்பு
தமிழ்நாடு

தனியார் பேருந்தில் 3 மடங்கு கட்டணம்: பயணிகள் புகார்

புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
தனியார் பேருந்தில் 3 மடங்கு கட்டணம்
பகிர்:


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்வதற்கு அரசு பேருந்துகளில் ரூ.37 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து குறைவான அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதை பயன்படுத்தி, தனியார் பேருந்துகளில் ரூ.100 முதல் ரூ.150 வரை 3 மடங்கிற்கு மேலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.