தமிழ்நாடு

கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்த திமுகவில் குழு அமைப்பு

DIN

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைத்து அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

இந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் உள்ளோா் விவரம்: குழுவின் தலைவா் டி.ஆா்.பாலு, உறுப்பினா்களாக கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆா்.எஸ்.பாரதி, எ.வ.வேலு ஆகியோரை நியமித்து துரைமுருகன் அறிவித்துள்ளனா்.

கூட்டணிக் கட்சிகளுடன் விரைவில் இந்தக் குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT