தமிழகத்தில் புதிதாக 910 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 910 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 910 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 910 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,19,845 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,007 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய அறிவிப்பில் மேலும் 11 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இதுவரை மொத்தம் 7,99,427 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 12,146 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தேதியில் 8,272 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.