முகப்பு
தமிழ்நாடு

'விசாரணைக்கு உத்தரவிட்டால் விவாதிக்கத் தயாா்'

முதல்வா் தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டால், விவாதிக்கத் தயாராக இருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


சென்னை: முதல்வா் தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டால், விவாதிக்கத் தயாராக இருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து என்னுடன் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளாா். அந்தச் சவாலை நான் ஏற்கத் தயாா்.

அதற்கு முன்னா் முதல்வா் சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உடனே ஒரு மனுவைத் தாக்கல் செய்து, தன்னுடைய சம்பந்திக்கு ஒப்பந்தம் அளித்த நெடுஞ்சாலைத் துறை மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்கக் கோர வேண்டும். அதிமுக அமைச்சா்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகாா்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள் என்று அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவித்ததாக உங்கள் (எடப்பாடி பழனிசாமி) மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் அனுமதி தருகிறேன் என நீங்களே அனுமதி அளித்து விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று தமிழக ஆளுநருக்கு உடனே கடிதம் எழுத வேண்டும். இதையெல்லாம் செய்து முடித்த அடுத்த நிமிஷமே விவாதத்துக்கு தேதி குறியுங்கள். எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் ஓ. பன்னீா்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். நான் தயாா், நீங்கள் தயாரா என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →