முகப்பு
கதம்ப காய்கறி கூட்டு
தமிழ்நாடு

கதம்ப காய்கறி கூட்டு

காய்கறிகளை சேர்த்து கதம்ப காய்கறி கூட்டு செய்து அசத்தலாம்.

தமிழ்நாடு

கதம்ப காய்கறி கூட்டு

காய்கறிகளை சேர்த்து கதம்ப காய்கறி கூட்டு செய்து அசத்தலாம்.

Updated On : 22 ஜூலை, 2025 at 11:21 AM
கதம்ப காய்கறி கூட்டு
பகிர்:

காய்கறிகளை சேர்த்து கதம்ப காய்கறி கூட்டு செய்து அசத்தலாம்.

தேவையானவை:

கேரட், பீன்ஸ், அவரைக்காய், சேப்பக்கிழங்கு, பூசணிக்காய், பரங்கிக்காய் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 100 கிராம்
புளி - எலுமிச்சம்பழம் அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்து காய்கறிகளையும் சற்று நீள நீளமாக நறுக்கி பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

பின் புளியைக் கரைத்துவிட்டு, சாம்பார் பொடியைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவலை வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து காய்கறி கலவையுடன் சேர்க்கவும்.

நல்லெண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கூட்டுடன் கலந்து, ஒரு கொதிவிட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

- ராஜேஸ்வரி ரவிக்குமார்

முழு கட்டுரையைப் படிக்க →