முகப்பு
தமிழ்நாடு

தொடர் மழை,விலை வீழ்ச்சி எதிரொலி: மக்காச்சோள அறுவடை நிறுத்தி வைப்பு

தொடர் மழை மற்றும் விலை வீழ்ச்சியினால், தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் மக்காச்சோள அறுவடையை நிறுத்தி வைத்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடையை நிறுத்தி வைத்துள்ள விவசாயிகள்.
பகிர்:



தம்மம்பட்டி: தொடர் மழை மற்றும் விலை வீழ்ச்சியினால், தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் மக்காச்சோள அறுவடையை நிறுத்தி வைத்துள்ளனர்.

தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடை காலத்தில், ஒரு மூட்டை (100 கிலோ) மக்காச்சோளம் விலை, அதிகபட்சம் ரூ.2200 வரைக்கும் விற்பனையாகி விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்தது. அதனால், இந்த ஆண்டு மானாவாரி பட்டத்தில், தம்மம்பட்டி பகுதியில், அதிக ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது.

கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது, ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.1400-க்கு விற்றது. அதிக விளைச்சல் மற்றும் தொடர் மழையின் காரணமாக, மக்காச்சோளத்தின் விலை படிப்படியாக குறைந்து, ஒரு மூட்டை ரூ.1180 ஆக வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை கவலை அடையச் செய்தது. 

வரும் பொங்கல் பண்டிகை முடிந்து, மானாவாரி பட்டத்தின் இறுதிகால அறுவடை, துவங்கும் போது, மக்காச்சோளம் விலை உயரும் என உள்ளூர் வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதால்,  தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடையை, பெரும்பாலான விவசாயிகள், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →