தமிழகத்தில் புதிதாக 761 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 761 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 761 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 218 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,25,537 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் 882 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,06,018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 12,215 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 7,304 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.