நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, தர்கா மனோராக்களில் கொடிமரம்(பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் நாகூர் ஆண்டவர் தர்காவின் 464- ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜனவரி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தர்காவின் பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, தர்காவில் அதிகாலை முதல் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், தர்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு தூ ஆ செய்து காலை 6} மணிக்கு தர்காவில் பள்ள சாகிபு மனோராவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அதையடுத்து தர்கா முகப்பில் உள்ள பெரிய மனோரா, தலைமாட்டு மனோரா, முதுபக் மனோரா, ஓட்டு மனோராக்களிலும் பாய்மரம் ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை,ஜீனி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்