தமிழ்நாடு

சங்ககிரி: வைகுந்தம் சுங்கச்சாவடியில் மின் வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையம் தொடக்கம்

DIN


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியில் தனியார் நிறுவனத்தின் சார்பில்  அமைக்கப்பட்டுள்ள மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையம் தொடக்க விழா வைகுந்ததில் செவ்வாயக்கிழமை நடைபெற்றது. 

சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டினை சேமிக்கவும் தற்போது எரிபொருள்களுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மின்வாகனங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில்  அதற்கான மின்னேற்றம்  செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  அதனையடுத்து சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்னேற்ற நிலையத்தை சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT