தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக மாவட்டத்தில் 14 ,700 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது முதல் போக சாகுபடி நெற்பயிர் மாவட்டத்தின் பல இடங்களில் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

ஆனால், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி போன்ற பகுதிகளில் 2000 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட  நெற்பயிர் அறுவடைக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாத நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கி விட்டன.

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

SCROLL FOR NEXT