சீர்மரபினர் சமூகத்தினருக்கு டிஎன்டி என ஜாதிச்சான்று வழங்கக் கோரி முதல்வரிடம் மனு அளிக்க வந்த சீர்மரபினர் சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தொடங்கி வைத்தபோது, விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு மற்றும் சீர்மரபினர் சங்கத்தினர் மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்த காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 24 பேரும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.