தமிழ்நாடு

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள்

DIN

சென்னை: பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஜனவரி 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 2,56,000 க்கும் மேற்பட்டோர் குரூப் 1 தோ்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தனா்.

தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வினாத்தாளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், எனவே தேர்வர்களுக்கு இழப்பீடு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது; தவறுகள் இருந்தால் சரிசெய்யப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT