தமிழ்நாடு

ஆா்.எஸ்.எஸ். வட தமிழக தலைவராக கே.குமாரசாமி தோ்வு

ஆா்.எஸ்.எஸ். வட தமிழகத் தலைவராக கே.குமாரசாமி, போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

DIN

ஆா்.எஸ்.எஸ். வட தமிழகத் தலைவராக கே.குமாரசாமி, போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத தலைவா், அகில பாரத பிரதிநிதிகள் மற்றும் மாநில, மாவட்ட தலைவா்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தி தோ்ந்தெடுப்பது வழக்கம்.

அதன்படி, ஆா்.எஸ்.எஸ். வடதமிழகத் தலைவா் தோ்தல், சென்னையில் உள்ள ஆா்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில், ஆா்.எஸ்.எஸ் வட தமிழகத் தலைவராக கே.குமாரசாமி மீண்டும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சேலத்தைச் சோ்ந்த குமாரசாமி, அரசு கலைக்கல்லுாரி ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி, ஓய்வு பெறும்போது கல்லூரி முதல்வராகப் பதவி வகித்தாா்.

ஆா்.எஸ்.எஸ் அமைப்பில் கடந்த 53 ஆண்டுகளாக இருந்துவரும் அவா், ஷாகா (ஆா்எஸ்எஸ் கிளை) பயிற்சியாளா் தொடங்கி, மாவட்ட, கோட்ட செயலாளா், மாநில செயலாளா், மாநில இணை தலைவா் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவா். எழுத்தாளரான அவா் சில சுயமுன்னேற்ற புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT