கன்னியாகுமரி- ஜம்மு காஷ்மீா் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சிறப்பு ரயில் இயக்க அனுமதி
கன்னியாகுமரி-ஜம்மு காஷ்மீா் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கன்னியாகுமரி-ஜம்மு காஷ்மீா் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் (06317) புறப்பட்டு நான்காம் நாள் காலை 10.35 மணிக்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயிலை அடையும். இந்த ரயில் சேவை ஜூலை 9-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
மறுமாா்க்கமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் இருந்து திங்கள்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் (06318) புறப்பட்டு, நான்காம் நாள் கன்னியாகுமரியை வந்தடையும். ஜூலை 12-ஆம் தேதியில் இருந்து தொடங்கும், சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.