துரைமுருகன் 
தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது: துரைமுருகன்

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசுக்கு அனுமதி தராது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

DIN


மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசுக்கு அனுமதி தராது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 6) சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, மேக்கேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு அனுமதி வழங்காது என்று ஷெகாவத் கூறினார். 

கர்நாடக அரசு ஒப்புதல் வாங்கிவிட்டதால் மட்டும் மற்ற மாநிலத்தின் நலனுக்கு எதிராக  அணை கட்டி விட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனியாக ஒரு நிரந்தர தலைவரை நியமிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டியது குறித்தும் புகார் தெரிவித்துள்ளோம்.

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழகத்திற்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தினோம். 

தமிழகத்திற்கு மாதா மாதம்  கர்காடக அரசு தர வேண்டிய காவிரி நீரை திறந்துவிட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று  துரைமுருகன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT