உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

பண மோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு விலக்கு: உயா்நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின்

DIN

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் போது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவா் செந்தில்பாலாஜி. போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பெரும் தொகையை மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஜூலை 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புகாா்தாரா்கள் தரப்பில், இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். மேலும் அமைச்சா் செந்தில்பாலாஜி, வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக்ஸை தொடர்ந்து மார்க்! வெற்றி எதிர்பார்ப்பில் கிச்சா சுதிப்!

கம்பி ஏற்றிவந்த வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்!

100 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை

கேரம் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வார இறுதி நாளுக்கு மாற்றப்பட்ட அனுமன் தொடர்! இனி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்!

SCROLL FOR NEXT