தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,652 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,21,438 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,104 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,56,165 பேர் குணமடைந்துள்ளனர்.
36 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 33,454 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தேதியில் 31,819 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 290 பேருக்கும், ஈரோட்டில் 193 பேருக்கும், தஞ்சாவூரில் 191 பேருக்கும், சேலத்தில் 170 பேருக்கும், சென்னையில் 165 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.